1. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன --- நபிகள் நாயகம்
2. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம் --- அன்னை தெரசா
3. ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான். --- காந்திஜி
4. யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும், மரியாதையும் போய் விடுமே என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான் --- சுவாமி விவேகானந்தர்
5. மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை --- தந்தை பெரியார்
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும் --- பெர்னார்ட்ஷா
7. தன்னை வென்றவன் தரணியை வெல்வான் --- அறிஞர் அண்ணா
8. ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை --- லியோ டால்ஸ்டாய்
9. நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது --- அடால்ஃப் ஹிட்லர்
10. உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை --- வோல்டன்.
11. உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லை. அவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன --- லிடர்மென்
12. கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது --- நெப்போலியன் ஹில்
13. புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள். அது உங்களுக்குதிரும்ப வராது.
14. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான் --- பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்
15. ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு. --- எமர்சன்
16. செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைதான். --- கால்லைல்
17. துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! --- பெஞ்சமின்
18. மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது --- தாகூர்
19. நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்!
--- ஷெல்லி
20. மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி --- அல்பிரட் ஐன்ஸ்டைன்
No comments:
Post a Comment