இலக்கணம்
I. பொருத்துதல்
1. ஆர்வலர்-அன்புடையவர்
2. புன்கணீர்-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
3. என்பு -எலும்பு
4. ஈனும்-தரும்
5. ஆர்வம்-விருப்பம்
6. நண்பு -நட்பு
7. வையகம் -உலகம்
8. என்பிலது -எலும்பு இல்லாதது.(புழு)
9. அன்பிலது -அன்பு இல்லாதது
10. மறம்-வீரம்
11. வற்றல் மரம் -வாடிய மரம்
12. அணியர் -நெருங்கி இருப்பவர்
13. சேய்மை -தொலைவு
14. செய் -வயல்
15. அனையார்-போன்றோர்
16. வண்மை-கொடை
17. கோணி-சாக்கு
18. ஞாலம் -உலகம்
19. உவந்து செய்வோம்-விரும்பிச் செய்வொம்
20. மடவார்-பெண்கள்
21. தகைசால்-பண்பில் சிறந்த
22. ஒதின்-எதுவென்று சொல்லும் போது
23. வானப்புனல்-மழைநீர்
24. தழை -செடி
25. தழையா வெப்பம்-பெருகும் வெப்பம்
26. தழைக்கவும் - குறையவும்
27. ஆற்றவும் - நிறைவாக
28. உணா - உணவு
29. ஆற்றுணா - வழிநடைஉணவு(கட்டுச்சோறு)
30. அரையன் - அரசன்
31. வெய்யவினை - துன்பம் தரும் செயல்
32. வீறாப்பு - இறுமாப்பு
33. பலரில் - பலருடைய வீடுகள்
34. புகல் ஒண்ணாதே -சொல்லாதே
35. சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
36. கடம் - உடம்பு
37. அவல் - பள்ளம்
38. மிசை - மேடு
39. ஆடவர் - ஆண்கள்
40. நல்லை - நல்லதாக இருக்கிறாய்
41. இரட்சித்தல் - காப்பாற்றுதல்
42. பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரம்மன்
43. சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்
44. புரம் - சிறந்த ஊர்களைக் குறிக்க பயன்படுவது (காஞ்சி-காஞ்சிபுரம்)
45. கடிகை-அணிகலன்
46. ஈரம் - அன்பு
47. அளைஇ -கலந்து
48. படிறு -வஞ்சம்
49. செம்பொருள் -மெய்ப்பொருள்
50. அகன் -அகம், உள்ளம்
51. அமர் -விருப்பம்
52. அமர்ந்து -விரும்பி
53. முகன்-முகம்
54. இன்சொலன் -இனிய சொற்களைப் பேசுபவன்
55. அமர்ந்து -விரும்பி
56. அகத்தான் ஆம் -உள்ளம் கலந்து
57. துவ்வாமை -வறுமை
58. யார் மாட்டும் -எல்லாரிடமும்
59. இன்புறூஉம் -இன்பம் தரும்
60. துன்புறூஉம் -துன்பம் தரும்.
61. அல்லவை -பாவம்
62. நாடி -விரும்பி
63. பயக்கும் -கொடுக்கும்
64. தலைப்பிரியாச் சொல் -நீங்காத சொற்கள்
65. சிறுமை -துன்பம்
66. மறுமை -மறுபிறவி
67. இம்மை -இப்பிறவி
68. ஈன்றல் -தருதல், உண்டாக்குதல்
69. வன்சொல் -கடுஞ்சொல்
70. எவன்கொலோ -ஏனோ?
71. கவர்தல் -நுகர்தல்
72. அற்று -அதுபோன்று
புகழ்பெற்ற நூலாசிரியர்கள்
1. ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர் -ரா.பி சேதுப்பிள்ளை
2. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் -திரிகூட ராசப்பக் கவிராயர்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலை எழுதியவர்-இராமலிங்க அடிகளார்.
4. மனுமுறை கண்டவாசகம் என்ற நூலை எழுதியவர்-இராமலிங்க அடிகளார்.
5. திருவருட்பாவை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார்.
6. பாரததேசம் என்ற காவயித்தை இயற்றியவர்--மகாகவி பாரதியார்
7. நான்மணிக்கடிகையின் ஆசிரியர்--விளம்பிநாகனார்.
8. இசையமுது என்ற நூலின் ஆசிரியர்--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
9. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்--முன்றுறை அரையனார்.
10. சாகுந்தலம் என்ற நூலின் ஆசிரியர்--காளிதாசர்
11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு என்ற காவியத்தை இயற்றியவர்--தாராபாரதி
12. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலின் ஆசரியர்--தாராபாரதி
13. செய்யும் தொழிலே தெய்வம் என்ற நூலின் ஆசரியர்-பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.
14. ”அந்தக்காலம் இந்தக் காலம்” என்ற நூலின் ஆசிரியர்-உடுமலை நாராயண கவி.
இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
1. திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படுபவபர்-இராமலிங்க அடிகளார்
2. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாயடியதாகக் கூறியவர்.--இராமலிங்க அடிகளார் (எ) திருவருட்பிரகாச வள்ளலார்.
3. செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர்-திருவள்ளுவர்
4. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்--உ.வே.சாமிநாதர்.
5. வேங்கடரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்--உ.வே.சாமிநாதர்.
6. ”முயற்சி திருவினையாக்கும்” எனக் கூறியவர்--திருவள்ளுவர்
7. “பாட்டுக்கொரு புலவன்” என அழைக்கப்படுபவர்--பாரதியார்
8. ”புரட்சிக் கவிஞர்” என அழைக்கப்படுபவர்---பாரதிதாசன்
9. ”பாவேந்தர்” என அழைக்கப்படுபவர்--பாரதிதாசன்
10. வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டவர்-ஈ.வெ.ரா
11. “பெரியார்” என அழைக்கப்பட்டவர்--ஈ.வெ.ராமசாமி
12. ”தேசியம் காத்த செம்மல்” என அழைக்கப்படுபவர்--பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
13. ”மக்கள் கவிஞர்” என அழைக்கப்பட்டவர்-பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.
17. ”பகுத்தறிவுக்கவிராயர்” என அழைக்கப்படுபவர்-உடுமலை நாராயண கவி.
3.பிரித்தெழுதுக
1. அன்பகத்து இல்லா -அன்பு+அகத்து+இல்லா
2. வன்பாற்கண் -வன்பால்+கண்
3. தளிர்த்தற்று -தளிர்த்து+அற்று
4. தமக்குரியர் -தமக்கு +உரியர்
5. அன்பீனும் -அன்பு+ஈனும்
6. நிழலருமை -நிழல்+அருமை
7. வழக்கென்ப -வழக்கு+என்ப
8. தரமில்லை -தரம்+இல்லை
9. நன்கணியர் -நன்கு+அணியர்
10. புகழிழந்தேன் -புகழ்+இழந்தேன்
11. தமிழழகு -தமிழ்+அழகு
12. மலரடி -மலர்+அடி
13. தேனருவி -தேன்+அருவி
14. புறநானூறு -புறம்+நான்கு+நூறு
15. இனிதீன்றல் -இனிது+ஈன்றல்
ஆங்கில சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிதல்
1. டி.வி - தொலைக்காட்சி
2. ரேடியோ - வானொலி
3. டிபன் - சிற்றுண்டி
4. டீ - தேநீர்
5. கரண்ட் - மின்சாரம்
6. டெலிபோன் - தொலைபேசி
7. ஃபேன் - மின்விசிறி
8. சேர் - நாற்காலி
9. லைட் - விளக்கு
10. தம்ளர் - குவளை
11. சைக்கிள் - மிதிவண்டி
12. பிளாட்பாரம் - நடைமேடை
13. ஆபீஸ் - அலுவலகம்
14. சினிமா - திரைப்படம்
15. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
16. ரோடு - சாலை
17. பிளைட் - வானூர்தி
18. பேங்க் - வங்கி
19. தியேட்டர் - திரையரங்கு
20. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
21. பிளாக்போர்டு - கரும்பலகை
22. இனிஷியல் - முன்னெழுத்து
23. கம்பியூட்டர் - கணினி
24. காலேஜ் - கல்லூரி
25. யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
26. டெலஸ்கோப் - தொலைநோக்கி
27. தெர்மாமீட்டர் - வெப்பமானி
28. இண்டர்நெட் - இணையம்
29. ஸ்கூல் - பள்ளி
30. சயின்ஸ் - அறிவியல்
31. மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி
32. நம்பர் - எண்
33. போஸ்ட் ஆபீஸ் - அஞ்சல் நிலையம்
34. பஸ் ஸ்டான்ட் - பேருந்து நிலையம்
35. டிரைன் - தொடர்வண்டி
36. போட்டோ - புகைப்படம்
37. கவர்னர் - ஆளுநர்
38. ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
39. டியூப் லைட் - குழல் விளக்கு
40. கார் - மகிழுந்து
41. காபி - குளம்பி நீர்
42. பிளாஸ்டிக் - நெகிழி
43. மீடியா - ஊடகம்
44. தெர்மாகூல் - நெட்டிகள்
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்
1. அமுதன்...........குடித்தான். (பால் / பல்) விடை=பால்
2. தென்றல்...............படித்தாள். (படம் /பாடம்) விடை-பாடம்
3. சிற்பி....................செதுக்கினான். (சிலை/சீலை) விடை-சிலை
4. கடை ஏழு வள்ளல்களுள் ஒருவர்................... .(பாரி/பரி) விடை-பாரி
5. முகிலனின் பாட்டி …............. கூறுவார். (கதை/காதை) விடை-கதை
6. மல்லிகை.............வீசியது. (மனம், மணம்) விடை-மணம்
7. பூமியை …............வருவேன். (வலம், வளம்) விடை-வலம்
8. …...............பதுங்கிப் பாயும். (புலி, புளி) விடை-புலி
9. முகத்தில் …........முறுவல் வேண்டும்.(புன், புண்) விடை-புன்
10. நாய்-------------(வால், வாள்) நிமிராது. விடை-வால்
11. உயர்ந்து நிற்பது.............(மலை, மளை) விடை-மலை
12. வானத்தில் இருந்து பெய்வது................(மழை, மலை) விடை-மழை
13. உழவர்கள் ஆடித்திங்களில் …..................பூட்டுவர். (பொண்ணேர், பொன்னேர்) விடை -பொன்னேர்
14. மழை நீரை...............என்பர். ( வானப்புனல், வாணப்புனல்) விடை-வானப்புனல்
இலக்கியம்
1. திருக்குறளை இயற்றியவர்--திருவள்ளுவர்
2. திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது.
3. திருக்குறளிலுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-133
4. திருக்குறளிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை-1330
5. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
6. திருவள்ளவர்ஆண்டு கணக்கிடும் முறை--கிறித்து ஆண்டு+31 (எ.கா --2013+31=2044)
7. குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
8. நாலடியார் -பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
9. நாலடியார் 400 பாடல்களைக் கொண்ட நூலாகும்.
10. சமணமுனிவர் பலர் பாடிய நூல்களின் தொகுப்பு --நாலடியார்
11. நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
12. நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாடலும் 4 அறக்கருத்துகளைத் தெரிவிக்கிறது.
13. பாரதிதாசன் எழுதிய கவிதை நூற்கள்-(பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு,இசையமுது)
14. பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
15. பகுத்தறிவாளர் சங்கத்தை அமைத்தவர்--ஈ.வெ.ரா
16. “பெண்களுக்கு நகையோ அழகான உடையயோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.” என முழங்கியவர்--ஈ.வெ.ராமசாமி
17. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
15. பாரதிதாசனின் இயற்பெயர்--கனக சுப்புரத்தினம்
தமிழ் இலக்கணம்
1. உயிரெழுத்க்களின் எண்ணிக்கை-12
2. மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை-18
3. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை-216
4. ஆய்த எழுத்துக்களின் எண்ணிக்கை-1
5. தமிழில் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை-5 (அ, இ, உ, எ,ஒ)
6. தமிழில் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை-7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
7. சொல் நான்கு வகைப்படும்
8.
இலக்கணக்குறிப்பு
இரட்டைக்கிளவி
ஒலியை உணர்த்தும் சொற்கள், இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும். அவ்வாறு வரும்பொழுது , அஃது ஒலிக்குறிப்பை வெளிப்படுத்தும். இதனைப் பிரித்தால் பொருள் தராது
(எ.கா) மணமண, கணகண, சளசள, படபட, பளபள, குடுகுடு, வளவள, தணதண, மடமட, தமதம, சடசட
No comments:
Post a Comment